மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் தேசிய நேர்மை வார நிகழ்வுகள் தொடர்கிறது....
29.07.2026 இன்று 'மனித மாண்பு நிறைந்த நேர்மை மிக்க சமூகம்' என்னும் கருப்பொருளின் கீழ் ஆன்மிக, அறநெறி, கலாசார, சமூக நேர்மையை மேம்படுத்தும் நாள் பிரகடனப்படுத்தப்பட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் அறநெறிப்பாடசால் மாணவர்களுக்கு நேர்மை மிக்க சமூகம் தொடர்பான எண்ணக்கருக்களுடன் சித்திர போட்டி, கட்டுரைப் போட்டி என்பன நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்றது இதன் போது தனதுரையில் இன்றைய சிறுவர்களிடம் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி எதிர்பார்க்கும் நெறிமுறை சார் சுத்தப்படுத்தலை பற்றியும் ஆழமாக எடுத்துரைத்தார். மேலும் இம் மாணவர்களுக்கு மனோஹரி விசேட திட்டத்தின் கீழ் பொறுப்புமிக்க மாணவர்களாவதற்கான மேலும் தொகுதி ஒன்றும் உளவளத்துணை உத்தியோகத்தரால் நிகழ்த்தப்பட்டது.








No comments:
Post a Comment