மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேர்மையான அரச சேவைக்கான 'நேர்மைக் கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா' தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்......
'நேர்மையான கலாசாரம் - சுத்தமான இலங்கை' என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 'நேர்மை வாரம்' ஆரம்ப நிகழ்வு (27) ஆரம்பமானது
பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு. தேசியக் கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பிரதேச செயலாளர் தமதுரையில் இலங்கையின் ஒட்டுமொத்த அரச சேவையினதும் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துதல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பினைக் கட்டியெழுப்புதல் ஆகியன தற்போதைய அரசின் முதன்மையான எதிர்பார்ப்பாக அமைந்துள்ளதுடன், இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து, அரச சேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துதல் தலையாய நோக்கமாகும் என தெரிவித்தார்.
உதவி பிரதேச செயலாளர் திருமதி.சுபா சதாகரன் அவர்களால் உறுதிமொழி வாசிக்கப்பட்டதற்கு இணங்க அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியபிரமானம் செய்து கொண்டனர். சமுர்த்தி தலைமையக முகாமையாளரின் நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே முடிவுற்றது
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மற்றும் ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 









No comments:
Post a Comment