பொலன்னறுவையில் தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதற்கட்ட (18) திறந்து வைக்கப்பட்டது.............

 பொலன்னறுவையில் தேசிய கிரிக்கெட் மைதானத்தின் முதற்கட்ட (18) திறந்து வைக்கப்பட்டது.............

திறமையான வீரர்களை தேசிய அணியில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு சம வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் 'தேசிய அபிவிருத்தி பாதை' திட்டத்தின் கீழ் இந்த புதிய மைதானத்தை பொலநறுவை ஹிகுராக்கொடையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இத்திறப்பு விழாவில் இலங்கையின் சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.


வடமத்திய மாகாணத்தில் தேசிய மைதானம் ஒன்றின் நீண்டகால தேவையை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த மைதானத்தின் நிர்மாணத்திற்காக இலங்கை கிரிக்கெட் மொத்தமாக 170 மில்லியன் செலவிட்டுள்ளது. பொலன்னறுவை, ஹிகுராக்கொடையில் 45 ஏக்கரில் அமைந்துள்ள இந்த மைதானம், 10 புல் கீற்றுகள் மற்றும் பிரதான புல்வெளியைச் சுற்றி 80 மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளது, இது கிரிக்கெட் வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க வசதியாக அமைகிறது.

அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கும், பயனளிக்கும் வகையில் பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசதி வட மத்திய மாகாண கிரிக்கெட் சங்கத்தின் கீழ் இந்த வீரர்கள் தங்கள் திறமைகளை மேம்படுத்த உதவும்.

மேலும், விளையாட்டுத்துறை அமைச்சர்  ஹரின் பெர்னாண்டோ தலைமையில் 'விளையாட்டை கிராமத்திற்கு எடுத்துச் செல்லும்' முயற்சியின் ஒரு பகுதியாக, கிராமப்புற வீரர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், 12 பாடசாலை, 10 விளையாட்டு சங்கங்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

பொலன்னறுவை தேசிய கிரிக்கெட் மைதானம், பொலன்னறுவை கிரிக்கெட் மைதானம் அல்லது தேசிய கிரிக்கெட் மைதானம் என்றும் அழைக்கப்படுகிறது, இலங்கையின் பொலனறுவ மாவட்டத்தில் உள்ள ஹிங்குராங்கொடாவில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானமாகும். ரூ.130 மில்லியன் ரூபா  செலவில் 2021, 6 ஏப்ரல் அன்று இம்மைதானம் திறந்து வைக்கப்பட்டது.

இம்மைதானத்தில் ஒரு பெரிய விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாக இந்த மைதானம் கட்டப்பட்டுள்ளது இந்த மைதானம் 45 ஏக்கர் நிலப்பரப்பில் 80 மீட்டர் எல்லை தூரம் மற்றும் 10 சென்டர் விக்கெட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட்டின் தேசிய பாதை திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மைதானம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் 2016 இன் பிற்பகுதியில் அறிவிக்கப்பட்டது.  பொலனறுவை கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகள் பல ஆண்டுகளாக தாமதமானது. மைதானத்தை அமைப்பதற்கான டெண்டர்கள் 2018 இல் வழங்கப்பட்டது. இறுதியாக பிப்ரவரி 2019 இல் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

மே 2020 இல், கோவிட்-19 தொற்றுநோய் வெடித்ததன் காரணமாக மைதானத்தின் திறப்பு விழா மேலும் பல மாதங்கள் தாமதப்படுத்தப்பட வேண்டியிருந்தது. இப்போது சகல பணிகளும் முடிவடைந்து  திறந்த வைக்கப்பட்டுள்ளது.





Comments