மண்முனைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்...................

 மண்முனைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம்...................

 மண்முனைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டம் என்னும் நிகழ்வு 25 ஆம் திகதி ஆரையம்பதி கிழக்கு மட்/மம/ ஹைராத் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ் அவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.
மற்றும் இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர், மட்/மம/ஹைராத் வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், உளவள துணை உதவியாளர், போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டதுடன் பிரதேச செயலாளர் அவர்களினால் பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்று நடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



Comments