கோறளைப்பற்று மத்தியில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு..............

 கோறளைப்பற்று மத்தியில் இடம் பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு..............

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவினால் கிராம மட்டத்தில் நடாத்தப்பட்ட மாவடிச்சேனை, செம்மண்ணோடை பிரிவுகளு்கான சர்வதேச மகளிர்தின நிகழ்வு மகிழ்ச்சியான குடும்பத்தில் பெண்களின் வகிபாகம் என்ற தலைப்பில் பிரிவு உத்தியோகத்தர் சீ.எம்.எஸ்.இஸ்மாயில் தலைமையில் மாவடிச்சேனை கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு வளவாளராக JDIK அமைப்பின் தலைவரும் கோறளை பற்று மேற்கு கலாச்சார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர்முகம்மட் மெளலவி அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு உத்தியோகத்தர் வீ.ரீ.பாஹிரா ஆகியோரும் மகளீர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.





Comments