400வயது பாகம்-03: ஜேக்கப்‌ அலெக்சாண்டர்‌ அடிகளார் காலத்தில் கள்ளியங்காடு சேமக்காலையைச்‌ சுற்றி ஒரு மதில்...........

400வயது பாகம்-03: ஜேக்கப்‌ அலெக்சாண்டர்‌ அடிகளார் காலத்தில் கள்ளியங்காடு சேமக்காலையைச்‌ சுற்றி ஒரு மதில்...........

1902ல் தாண்டவண்வெளி ஆலயத்தின் தோற்றம்.

‌ 1963ம்ஆண்டில்பங்குத்தந்தையாக வந்த ஜேக்கப்அலெக்சாண்டர்அடிகளார்குருமனையைப்புதுப்பித்து முன்பாக உள்ள இரு அறைகளையும்கட்டினார்‌.  1967ம்ஆண்டில்திருக்குடும்பக்கன்னியர்கள்தாண்டவன்வெளிக்கு வந்து தங்கள்இல்லத்தை அமைத்துப்பணிபுரிய ஆயர்கிளெனி அவர்களால்ஓழுங்கு செய்யப்பட்டது. அதற்காக ஆலயத்திற்கு அருகாமையில்இருந்த வீடும்வளவும்வாங்கப்பட்டது. கன்னியர்களும்‌ 1967 ஆகஸ்ட்மாதம்வந்திறங்கினர்‌. 

1960களில் தாண்டவண்வெளி ஆலயத்தின் தோற்றம்.

  பின்னர்இளம்பெண்களுக்கு தையற்கலை கற்பிப்பதற்காக பங்கின்புனித வின்சன்டி போல்சபையினர்‌ 1969ல்ஒரு சிறு கட்டிடம்அமைத்து அப்பணியையும்திருக்குடும்பக்கன்னியர்வசமே கொடுத்தனர்‌.  இக்காலகட்டத்தில் தான்தாண்டவன்வெளிபங்குமக்கள்கள்ளியங்காடு சேமக்காலையைச்சுற்றி ஒரு மதில்கட்ட வேண்டுமென்று விருப்பம்தெரிவித்தனர்‌. அதற்கு அலெக்சாண்டர்அடிகளாரும்சம்மதம்கொடுத்தார்‌. எனவே திருவாளர்கள்தவராசா (போஸ்  மாஸ்டர்‌), சாமுவேல்ஜோசப்‌, அன்னதாஸ்ஆகியோர்முன்வந்து நிதி சேகரித்து அதை ஆரம்பித்தனர், அவர்களால்‌ 30 அடி நீளமான ஒரு மதில்பகுதியை மட்டுமே கட்ட முடிந்தது. பின்னர்நிதியில்லாமையினால்அது தொடரப்படாமலே கிடந்ததுஅருட்ந்தை அலெக்சாண்டர்‌ வரது காலத்தில் தான் திருப்பலி பாடல்களை போதகர் கே.யேசுராஜா  அவர்கள் இறைமக்கள் பாடுவதற்கான பயிற்சிகளை வழங்குவதற்காக அனுமதியையும் வழங்கி இருந்தார். அருட்தந்தை  1971 பங்குனி வரை கடமையாற்றிதிருமலை சின்னக்கடை பங்கிற்கு மாற்றலாகிச்சென்றார்.

ஜோர்ச் E.L.வம்பேக் அடிகளார் ஸ்தாபித்த பாத்திமா கிரியின் தோற்றம்

1971 பங்குனி புதிய பங்குத்தந்தையாக அருட்தந்தை F.M.செலர்அடிகளார்நியமிக்கப்பட்டார்‌. அவர்பங்கிற்கு வந்த மூன்று மாதங்களுக்குள்ளேயே தாண்டவன்வெளி பகுதியில்உள்ள எல்லாக கத்தோலிக்க குடும்பங்களையும்முறையாக இல்லத்தரிசிப்புச்செய்துஅவர்களுடைய சகல விபரங்களையும்சேகரித்தார்‌. அப்போதுஅவருடன்துணைககுருவாய்‌ இருந்த டோமினிக் சாமிநாதன்அடிகளாரை தாண்டவன்வெளியின்ஒரு பகுதியாய்இருந்த இருதபுரத்திலும்அதே வேலையைச்செய்யுமாறு பணித்தார்‌. பின்னர்இருதபுரமும்அதிகமான கத்தோலிக்க குடும்பங்களைக்கொண்டதாக விளங்கியபடியல்இருவரும்‌ ஆயர் இக்னேசியஸ் கிளெனி அவர்களைச்சந்தித்து இருதயபுரத்தை தனி ஒரு பங்காகப்பிரிக்குமாறு கோரினர்‌. ஆயரும்செவிமடுத்து அப்படியே புதிய பங்காக இருதயபுரத்தை 1970ம்ஆண்டில்பிரகடனம்செய்து, அதன்பங்குத்தந்தையாக தாண்டவன்வெளிப்பங்குத்தந்தையையே நியமித்து இரு பங்குகளையும்பராமரிக்குமாறு பணித்தார்‌.

ஜோர்ச் E.L.வம்பேக் அடிகளார் ஸ்தாபித்த லூர்துகெபியின் தோற்றம்

 அருட்தந்தை செலர்அடிகள்இருதய நோய்வாய்ப்பட்டிருந்த காரணத்தினால்‌, 1971 புரட்டாதி மாதம் திடீர்மரணம்அடைந்தார்‌. அவருக்குப்பின்‌ 1971 ஐப்பசியில் அருட்தந்தை பீற்றர்துரைரெட்ணம்‌ அடிகள் கனடாவில்தனது மேற்படிப்பை முடித்துவிட்டு வந்து கொண்டிருக்கும்போது அவரையே தாண்டவன்வெளிப்பங்குத்தந்தையாக நியமித்தார்‌. துரதிஷ்டவசமாக அருட்தந்தை பீற்றர்‌ துரைரெட்ணம்அடிகளார்மோல்ட்டா தீவில்வைத்துகாலமானர்‌. அவரை அங்கேயே அடக்கம்செய்தனர்‌. பின்னர்  சில மாதங்கள்அருட்தந்தை சாமிநாதன்தற்காலிக பங்குத்தந்தையாகக்கடமையாற்றினார்‌. அவ்வேளைதான்‌ 2ம்வத்திக்கான்சங்கப்படிப்பினையின்படி புதிய முறைத்திருவழிபாட்டுக்கேற்றாற்போல்ஆலயப்பகுதி திருத்தியமைக்கப்பட்டது. இதனைத்திருவாளர்ரெல்சன்பேர்டினன்ஸ்முன்நின்று சகல பொறுப்புக்களையும்தானே சுமந்து செய்து முடித்தார்‌. 

தாண்டவண்வெளி ஆலயத்தின் ஒரு தோற்றம் இன்று.....

அவ்வேளை பன்னெடுங்காலமாக பீடத்திற்குப் பின்னால்இருந்த மரத்தாலான பீட அலங்காரங்கள்எல்லாம்அகற்றப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது. மேலே ஒரு பாடுபட்ட சிலுவை மரம்பூட்டப்பட்டது. கழற்றப்பட்ட அந்த மரத்தால்செய்யப்பட்ட அலங்காரங்கள்அனைத்தும்சிலாப மறைமாவட்டத்தின்புத்தளப்பகுதியில்உள்ள பாத்திமா ஆலயத்திற்கு நன்கொடையாக சாமிநாதன்அடிகளால்அளிக்கப்பட்டது. அதன் பின்‌ 1971 ஐப்பசியில்அருட்தந்தை சைமன்பெர்ணந்து அவர்கள்தாண்டவன்வெளி - இருதயபுரம்பங்குகளின்தந்தையாக நியமிக்கப்பட்டார்சாமிநாதன்அடிகள்மறை மாவட்ட இளைஞர்சமூகநலத்துறை இயக்குனராகவும்ஆயரின்செயலராகவும்நியமனம்பெற்று ஆயரில்லத்திற்கு மாற்றலாகிச்சென்றார்‌.  

அடுத்த தொடர் தொடரும் வரை காத்திருப்போம்..........

Comments