மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் வருடாந்த பொருட்கள் ஒப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல்.............

 மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் வருடாந்த பொருட்கள் ஒப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல்.............

மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தின் நிருவாகத்தின் மேற்பார்வையில் செயற்படும் அரச நிறுவனங்களின் கடந்த 2023ஆம் வருடத்திற்கான பொருட்கள் ஒப்பாய்வு தொடர்பான கலந்துரையாடல் (11)ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஸீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட செயலக வரவு செலவுத்திட்ட உதவியாளர் த.பிரகலாதன் ஒப்பாய்வின் போது மேற்கொள்ள வேண்டிய விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இதில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வொப்பாய்வு செயற்பாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்போது ஒப்பாய்வின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, எதிர்வரும் 31ஆம் திகதி மார்ச் மாதத்திற்கு முன்னர் கணக்காய்வு அத்தியட்சகர் மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு அனுப்பப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Comments