மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டு கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்............

 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 2024 ஆம் ஆண்டு கடமைச் செயற்பாடுகளை ஆரம்பித்தல்............

2024ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வானது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் (01) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றி தேசிய கீதம் பாடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் நாட்டுக்காக உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து 2 நிமிடம் மௌன அஞ்சலி நினைவுகூறப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் அவர்களும், திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சபேசன் மற்றும் கணக்காளர் சுந்தரலிங்கம், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள்என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கிய விடயமாகக் உத்தியோகத்தர்கள் வினைத்திறனான சேவையை வழங்க வேண்டும் என பிரதேச செயலாளரினால் உரையாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மற்றும் இந்நிகழ்வில் மரக்கன்றுகள் உள்ளிட்ட சிறுவர்களுக்கான புத்தகப்பை என்பன வழங்கி வைக்கப்பட்டன.


Comments