புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் வைத்திய முகாம்.........

  புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் வைத்திய முகாம்.........

மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலய மாணவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான வைத்திய முகாம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்வைத்திய சிகிச்சையின் போது மட்டக்களப்பு பிராந்திய உதவி சுகாதார வைத்திய அதிகாரி சோபனா இந்திரகுமார், மட்டக்களப்பு வைத்தியசாலையைச் சேர்ந்த பாடசாலைகளுக்கான பற்சிகிச்சையாளர் எம்.எம்.ஈ.அகிலா மற்றும் கல்லடி பிராந்திய சுகாதார அதிகாரி எஸ்.அமிர்தாப் ஆகியோர் கலந்து கொண்டு உடல், கண், காது, மூக்கு மற்றும் பல் தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது மட்டக்களப்பு பிரதேச உதவி சுகாதார வைத்திய அதிகாரியால் அன்றாடம் சூழலில் நிகழும் விபத்துக்கள் தொடர்பாகவும், அதிலிருந்து பாதுகாப்புப் பெறும் வழிகள் தொடர்பிலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.





Comments