மட்டக்களப்பு மாநகர சபையில் பிரதி ஆணையாளருக்கு பிரியாவிடை....

 மட்டக்களப்பு மாநகர சபையில் பிரதி ஆணையாளருக்கு பிரியாவிடை....

மட்டக்களப்பு மாநகர சபையில் பிரதி ஆணையாளராக கடந்த 04 ஆண்டுகளாக பணியாற்றி தற்போது கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் உதயகுமார் சிவராஜா அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு மட்டக்களப்பு மாநகர உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் (27) நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் பொறியியலாளர் என்.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப் பிரியாவிடை நிழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் பிரதி ஆணையாளருடனான தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கால்நடை மருத்துவர் ரி.துஷ்யந்தன், இயந்திரப் பொறியியலாளர் என்.யோகேந்திரன் உட்பட பகுதித் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.







Comments