மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா..........

 மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா..........

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியில் வாணி விழா இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி த.கணேசரத்தினம் தலைமையில் நடைபெற்றது.
உப பீடாதிபதிகள், விரிவுரை இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள் கல்லூரியின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் வாணி விழா மிக விமர்சையாக இடம் பெற்றது.
இவ் விழாவில், கலை, கலாசாரம் சார்ந்த நாடகம், நடனம், பாடல்கள் என்பன முதலாம் மற்றும் இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் அரங்கேறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இறுதிக்கட்டமாக கல்லூரி வளாகத்துக்குள் பயிரிடப்பட்ட விவசாய உற்பத்திகள் மூலம் அறுவடை செய்யப்பட்ட மரக்கறி வகைகளையும் இணைத்துக் கொண்டு இரண்டாம் வருட ஆசிரியர் பயிலுணர்களால் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




Comments