காத்தான்குடியில் 34 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டு விழா......

 காத்தான்குடியில் 34 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டு விழா......

காத்தான்குடி பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் சுவட்டு மைதானம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (07) பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் எ. டபிள்யு. இர்ஷாத் அலியின் வழிகாட்டலின் கீழ் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் ஐ. எல்.எம்.சாபிர் தலைமையில் காத்தான்குடி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதிகளாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜேசுதாசன் கலாராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் சமூக மேம்பாட்டுக்கான மக்கள் நிறுவன பணிப்பாளர் உட்பட, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 34 ஆவது இளைஞர் விளையாட்டுப் போட்டியின் குழு மற்றும் தனி விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன.
இதில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.





Comments