செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி.....

 செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி.....

 மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக  அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வருகை ஒரு விசேட அம்சமாக இருந்தது.

இந்நிகழ்வானது  (08) அன்று நடைபெற்றது, இந்த நிகழ்வில்  கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது அன்பான வாழ்த்துக்களை பாடசாலை சமூகத்திற்கு தெரிவித்ததுடன், பாடசாலையின் கடந்த கால மற்றும் தற்போதைய அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்துடன் மாணவர்களின் அர்ப்பணிப்பையும் கடின உழைப்பையும் பாராட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாணவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் பாராட்டினார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ. செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கல்வியின் முக்கியத்துவத்தையும், பிராந்தியத்தின் மற்றும் தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் செங்கலடி மத்திய கல்லூரி போன்ற நிறுவனங்களின் பங்களிப்பையும் எடுத்துரைக்கும் வகையில் அவர்களின் வருகை இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை அதிகரித்தது.








Comments