காத்தான்குடி பிரதேசத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை இளம் விளையாட்டு வீரர்களுக்கான வேலைத்திட்டம்

 காத்தான்குடி பிரதேசத்தில் சமுர்த்தி சமுதாய அடிப்படை இளம் விளையாட்டு வீரர்களுக்கான வேலைத்திட்டம்

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சமுதாய அடிப்படை வேலைத்திட்டத்தின் கீழ் கிரிக்கட் விளையாட்டு போட்டி காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் வழிகாட்டலில் (22) ஹிஸ்புல்லா மைதானத்தில் இடம்பெற்றது.
இப் போட்டியில் காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமையாளர் பத்மா ஜெயராஜ், முகாமைத்துவ பணிப்பாளர் வாமதேவன், புதிய காத்தான்குடி சமுர்த்தி
வங்கி முகாமையாளர் முஸம்மில், காத்தான்குடி வங்கி முகாமையாளர் சுல்மி, சமுர்த்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இப்போட்டியி்ன் நடுவர்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ரிஸ்வி மற்றும் றமீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.




Comments