வாழைச்சேனையில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

 வாழைச்சேனையில் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி சிசுபல திட்டத்திற்கு அமைவாக தரம் ஐந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வாழைச்சேனை வை அகமட் வித்தியாலத்தில் (09) திகதி நடைபெற்றது.
வாழைச்சேனை 206, 206பி, 206/D ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் வறிய மாணவர்களுக்கு இக்கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் சமுர்த்தி வங்கியின் தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், அதிபர்களான யூ.எல்.எம்.ஹரீஸ், யூ.எல்.எம்.அகமட், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான், பிரிவு உத்தியோகத்தர்களான சீ.எம்.எஸ். இஸ்மாயில,ஏ. பி சகாப்தீன்,யூ.ரெஜித்தா கிராம மட்டக் குழுத் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Comments