Tuesday, 17 January 2023

பணத்தாள் அச்சிட தடை: திணறும் அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.....

 பணத்தாள் அச்சிட தடை: திணறும் அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.....

நாட்டில் கொள்கை ரீதியாக தற்போது பணம் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (17-01-2023) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

'எமது வெளிநாட்டுக் கடனை செலுத்த முடியாது என்பதையும், அந்தக் கடன்களை மறுசீரமைக்க வேண்டும் என்பதையும் உலகிற்கு மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளதால், இந்த நேரத்தில், நாங்கள் கடன்களைப் பெற முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது. பணத்தினை அச்சிட போனால் எதிர்காலத்தில் கடன் கிடைக்காது. ஒரு கொள்கையாக, பணம் செலுத்தாததற்காக பணம் அச்சிடுவதை அரசாங்கம் நிறுத்திவிட்டது. இதனால் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றோம்.

டிசம்பர் மாதம் எவ்வாறு செலவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறித்த புள்ளிவிபரங்களை வழங்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, இலங்கை திறைசேரிக்கு 141 பில்லியன் வரி மற்றும் வரி அல்லாத படிவங்களைப் பெற்றுள்ளது.

சம்பளம் வழங்க 88 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது. ஓய்வூதியத்திற்காக 30 பில்லியன், உரங்களைப் பெற 6.5 பில்லியன், சுகாதார அமைச்சிற்கு தேவையான மருந்துகளுக்கு 8.7 பில்லியன், மற்ற தினசரி பயணச் செலவுகள் போன்ற நிர்வாகச் செலவுகள் 154 பில்லியன். அப்படியென்றால் 141ல் 154ஐ எப்படிப் பெறுவது? மாற்று வழி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை நிர்வகிப்பது சாத்தியமற்றதாகிவிட்டது.' எனத் தெரிவித்திருந்தார்

No comments:

Post a Comment

BattiEye

மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது......

 மட்டக்களப்பு லயன் கழகம் அபேக்சா நிறுவனத்துடன் இணைந்து நன்கொடைளை வழங்கியது...... மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு மட...