மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியால் நியமனம்...........

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதியால் நியமனம்...........



மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால்  நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களால் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக   நியமிக்கப்படட்டிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவி விலகியதைத் தொடர்ந்து மாவட்ட அபிவிருத்திக்குழுவின் பதவிகள் வறிதற்றதாகியிருந்தன.

மீண்டும் 21.10.2022 முதல் செயற்படும் வண்ணம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments