சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.....

 சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.....

சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2022ஆம் ஆண்டிற்கான பங்கேற்பு மேம்பாட்டு முறையினைப் பயன்படுத்தி ஒருங்கினைந்த சமூக மேம்பாட்டு, கிராம வளத்திரட்டு வேலைத்திட்டம் எனும் தலைப்பில் ஒரு செயலமர்வு திருகோணமலை சமுர்த்தி திணைக்களத்தின் பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வருகின்றது.

2022ஆம் ஆண்டிற்கான பங்கேற்பு மேம்பாட்டு முறையினைப் பயன்படுத்தி ஒருங்கினைந்த சமூக மேம்பாட்டு, கிராம வளத்திரட்டு வேலைத்திட்டம் எனும் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி, கோரளைப்பற்று மத்தி, ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் இருந்து ஒவ்வொரு கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான செலமர்வாக நடைபெற்று வருகின்றது. இச்செயலமர்வில் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், தெரிவு செய்யப்பட்ட கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.






Comments