நானும் என் சமுர்த்தியும் 103ம் தொடர்.....

 நானும் என் சமுர்த்தியும் 103ம் தொடர்.....

சிறப்பான முறையில் சமுர்த்தி வேலைத்திட்டங்களில் செயற்பட்டு வரும்  கல்லடி வேலூர் கிராம சமுர்த்தி மக்களை மகிழ்ச்சியில் திழைக்க ஒரு சுற்றுப்பயணத்தை தாய் சமுர்த்தி சங்கத்தின் ஏற்பாட்டில் அழைத்துச் செல்ல திட்டமிட்டேன். அதன் படி பொலநறுவ சென்று புராதன சின்னங்களையும், சிகிரிய மற்றும் கோலடன் டெம்பில் போன்றவற்றை பார்வையிடுவது என முடிவெட்டப்பட்டு தீர்மானித்தோம்.



குடும்பம் சகிதம் வருபவர்களையும் ஊக்கப்படுத்தி காலை, மதிய உணவுகளை தயாரித்து வருமாறு கூறினோம். சுமார் 60 பேருடன் எங்கள் பஸ் வண்டி பயணத்தை தொடங்கியது பஸ்ஸிக்குள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். முதல் தடவையாக ஒரு தூர பயணத்தில் எம் மக்களுடன் நானும் என் குடும்பமும் பயணித்தது மகிவும் சந்தோசமான பயணமாக இருந்தது. போகும் போது காலை உணவை உட்கொண்ட நாம் பொலநறுவையை அடைந்தோம் அங்குள்ள புராதான சின்னங்களை பார்வையிடவே மதியம் ஆகி விட்டது. ஒரு இரண்டு நாள் பயணமாக வந்திருக்கலாம் என ஒரு சிலர் தெரிவித்தனர். மீண்டும் பயணம் தொடர்ந்தது நேராக  சிகிரிய நோக்கி புறப்பட்டடோம். பலருக்கு இதுவே புதிய அனுபவமாக இருந்தது எல்லோரும் வியப்பாக பார்த்தார்கள் பலரும் சிகிரியாவை மேலே ஏறி பார்க்க ஆசை தான் ஆனால் அவர்களது உடல்நிலை இடம் கொடுக்கவில்லை, சிலர் ஏறினார்கள் பலர் கீழிருந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு இன்பமான பயணத்தில் எம் மக்களை அழைத்துச் சென்றதை நான் அவ்விடத்தில் உணர்ந்து கொண்டேன்.

 

அங்கிருந்து மதிய உணவருந்திய பின் தொடர்ந்த எம் பயணம்  கோல்டன் டெம்பிலை நோக்கி பயணித்தோம் அங்கே அமைந்திருக்கும் அற்புதமான புத்தர் சிலைகளை பார்வையிட்டு இனிதே பயணத்தை முடித்துக் கொண்டு மட்டக்களப்பை நோக்கிய எம் பயணத் தொடங்கியனோம். அந்த இனிமையான அனுபவத்தை  இன்றும் நான் எண்ணிப்பார்க்கின்றேன்.

இது ஒரு புறம் நடக்க இலங்கை சமுர்த்தி அதிகாரசபையின் கீழ் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான முகாமைத்துவ பயிற்சி நெறி ஒன்றை மட்டக்களப்பு பலநோக்கு கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் 25.11.2012  அன்று  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் P.குணரட்னம் அவர்களின்  தலைமையில் இடம்பெற்றது.




இச்செயலமர்வானது மூன்று தினங்கள் இடம்பெற்றது இதன் விரிவுரையாளர்களாக சமுர்த்தி வாழ்வாதார பணிப்பாளர் M.நடேசராசா அவர்களும், கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி கலாநிதி S.யோகஸ்வரன் அவர்களும். கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் V.கனகசிங்கம் அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் I.அலியார் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரை வழங்கினர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் J.F.மனோகிதராஜ் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடரும்......










Comments