நானும் என் சமுர்த்தியும் 98ம் தொடர்.....

 நானும் என் சமுர்த்தியும் 98ம் தொடர்.....



நான்காம் கட்ட திவிநெகும வேலைத்திட்டம் 22.10.2012 அன்று நாமுபூராவும் நடைமுறைபடுத்தப்பட்டது. இதில் புதிய காத்தான்குடியில் நடைபெற்ற ஆரம்ப வைபவத்தில் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார பணிப்பாளர் M.நடேசராசா அவர்களும், காத்தான்குடி பிரதேச செயலளார் S.H.முசம்மில் அவர்களும், காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமில் பணிப்பாளர் M.கருணாகரன் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும், சமுர்த்தி வலய முகாமையாளர் திரு.பரமலிங்கம் அவர்களும், காத்தான்குடி பிரதேச செயலக திட்டமிடல் பிரிவின் உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஜாபீர் நழீமி அவர்களும்,  சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது பொருளாதார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திவிநெகும மனைப் பொருளாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பயிர் பக்கட்டுகள் வீடு வீடாக சென்று வழங்கி வைக்கப்பட்டது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திலும் திவிநெகும 4ம் கட்ட நிகழ்வுகள் பிரதேச செயலாளர் U.உதசிறிதர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில்  ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களும் சமுர்த்தி முகாமையாளர்களும், சமுர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

 

திவிநெகும  4ம் கட்ட வேலைத்திட்டம் கல்லடிவேலூர் கிராமத்திலும் நடைபெற்றது  இந்நிகழ்வில் கல்லடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை அவர்களும் கல்லடி வேலூர் கிராம சேவகர் திரு.சிவலிங்கம் அவர்களும் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பயிர் விதைகளை வழங்கி வைத்தனர்.

தொடரும்.....














Comments