கொவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி திணைக்களத்திகு நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்....

 கொவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி திணைக்களத்திகு நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்....

இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தம்மையும் தம்  குடும்பத்தையும் கருத்தில் கொண்டு தமது சமுர்த்தி திணைக்களம்  தமக்கு உதவியதற்காக சமுர்த்தி திணைக்களத்திற்கு  மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தம் நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.

சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட போது அவர்களுக்கு 10000/= பெறுமதியான உலர் உணவு பொதிகளை வழங்க வேண்டும் என்பதில் பெரும் பங்காற்றி     செயற்பட்ட சமுர்த்தி திணைக்கள பணிப்பாளர் தலைமையதிபதி, சமுர்த்தி பணிப்பாளர்கள், சமுர்த்தி உதவிப்பணிப்பாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சகல சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அதேபோல் எமது மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர், சமுர்த்தி பணிப்பாளர், சமுர்த்தி  உதவிப்பணிப்பாளர்கள், மாவட்ட கணக்காளர், சமுர்த்தி கணக்காளர், சமுர்த்தி சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அதனை விரைவாக செயற்படுத்திய  பிரதேச செயலக மட்ட பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர்கள், மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க, சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர்கள் மற்றும் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.. 

கி.புவிதரன் சமுர்த்தி முகாமையாளர்,

மாவட்ட செயலம், மட்டக்களப்பு.






Comments