நானும் என் சமுர்த்தியும் - 51ம் தொடர்.......

 நானும் என் சமுர்த்தியும் - 51ம் தொடர்.......

சமுர்த்தி திட்டத்தில் 2007ம் ஆண்டு தொடக்கம் புகைத்தல் எதிர்ப்பு கொடிவாரத்தை சேமிப்பு வாரமாக செயற்படுத்தி வந்துள்ளது. இதன் மூலம் வருடம் தோறும் பல மில்லியன் ரூபாக்கள் சேமிக்கப்பட்டு சமுர்த்தி திட்டத்தின் கீழ் வாழும் குடும்பங்களில் வீடு இல்லாதோருக்கு வீடமைத்துக் கொடுத்தல், கல்வி வளர்ச்சிக்கு உதவுதல், பாரிய நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை இலங்கை பூராவும் சமுர்த்தி அதிகாரசபை நடைமுறைப்படுத்தி வந்தது. இதன் அடிப்படையில் 2007ம் ஆண்டில் 51.9 மில்லியன் ரூபாவும், 2008ம் ஆண்டில் 68.1 மில்லியன் ரூபாவும், 2009ம் ஆண்டு 83.2 மில்லியன் ரூபாவும், 2010ம் ஆண்டு 79.3 மில்லியன் ரூபாக்களும் சேமித்து சாதனையும் படைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இதனிடையே வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்களின் பெயர் விபரத்தை வலய மட்டத்தில் கோரப்பட்டிருந்தது. ஏற்கனவே 2008ம் ஆண்டு கல்லடி வேலூர் கிராமத்தில் மீன்பிடி மற்றும் கதிரை வாடகைக்காக 1% வீத வட்டியுடன் 20 மாத தவனையில் 2,94,000 வழங்கப்பட்டிருந்தது. இக்கடனை நான் வந்து தான் அறவீடு செய்தும் இருந்தேன் இதை வழங்கினால் அறவீடு செய்ய முடியுமா? என சிந்தித்தவனாக சமுர்த்தி ஒன்றியத்தை அழைத்து கலந்துரையாடினேன். சரியான நபரை தெரிவு செய்து வழங்கலாம் என கூறினர்.

2010ம் ஆண்டு மூன்று நபர்கர்களை தெரிவு செய்து மொத்தம் 70,000 ரூபாக்களுக்கு வாழ்வாதாரம் வழங்க முடிவெடுத்தேன். இக்கடனானது 50% மானியமாகவும் (நன்கொடை) 5%வட்டியுடன் 12 மாதங்களில் செலுத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டு பின்வருவோருக்கு வழங்கப்பட்டது. ந.அருணாச்சலம் அவர்களுக்கு 30,000 ரூபாய்  மாவரைக்கும் இயந்திரம் கொள்வணவு செய்வதற்காகவும், த.சிவகுமார் அவர்களுக்கு 30,000 ரூபாய் சிறு கடை வியாபாரம் செய்வதற்காகவும், எ.சுபத்திரா அவர்களுக்கு 10,000 ரூபாய் மிக்சர் தயாரிப்பதற்காகவும் வழங்கப்பட்டது. இவர்கள் இத்தொழிலை ஆரம்பிக்க இப்பணம் போதாவிடின் அவர்களின் பங்களிப்பு மிக அவசியமாக காணப்பட்டது. எனவே அவர்கள் தம் பங்களிப்பை கட்டாயம் செய்ய வேண்டும் இதுவே சமுர்த்தி திட்டத்தின் முக்கிய செயற்பாடாகும். இதற்கு அமையவே இவர்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டோம். இவர்களுக்கான இயந்திரங்கள் கொள்வணவு செய்யப்பட்டு மண்முனை வடக்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கணேசமூர்த்தி அவர்களினால் கல்லடி வலயத்தில் வைத்து வழங்கப்பட்டிருந்தது.

ஒக்டோபர்-01 சர்வதேச சிறுவர் முதியோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டதால் நாமும் அதை நடாத்தவது தொடர்பாக சமுர்த்தி ஒன்றியத்துடன் கலந்துரையாடினேன். இதன் போது ஒவ்வொரு சங்கத்தில் இருந்தும் ஒவ்வொரு முதியோரை தெரிவு செய்து கௌரவிப்போம் என முடிவெடுத்தோம். இதன் போது கல்லடி வேலூர் கிராமத்தில் 105 வயது மதிக்கத்தக்க ஒரு சமுர்த்தி பயனுகரி வாழ்வதாக நான் தகவல் தெரிவித்தேன் அவர்களையும் கௌரவிப்பதற்கான அனுமதியையும் கோரி இருந்தேன். இதற்காக ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபருடன் தொடர்பை ஏற்படுத்தி மண்டப ஒழுங்கையும் ஏற்படுத்திக் கொண்டு தாய் சங்க தலைவியான மா.தங்கேஸ்வரியிடம் சகல பொருப்புக்களையும் எவ்வொரு சங்கத்திற்கும் பகிர்ந்தளிக்குமாறு கூறினேன். கௌவிக்கப்படவுள்ள 9 சங்கத்தின் முதியவர்களின் பெயர் விபரங்களை மிக விரைவாக தெரிவு செய்து தருமாறும் கோரி இருந்தேன்.

01.10.2010 அன்று பாடசாலையில் இருந்த ஒரு தகவலை அதிபர் எனக்கு அனுப்பி இருந்தார். இன்று சிறுவர் தினம் நாங்கள் எங்கள் ஊரை சுற்றி ஒரு சிறு ஊர்வலம் செல்லப்போகின்றோம் தாங்களும் தங்கள் தாய்சங்க உறுப்பினர்களும் விரும்பினால் கலந்து கொள்ளமாறு கூறினார். நானும் சரி என்கின்ற வாறு அந்நிகழ்வில் கலந்து கொள்கின்றேன் தாய் சங்க அம்மாக்களிடம் தெரிவிக்கின்றேன் என்றேன். அதன் பின் ஸ்ரீ சக்தி வித்தியாலய அதிபரின் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டோம் பல வாசகங்களை முழங்கியவாறு மாணவர்கள் தங்கள் அழகான ஊரை சுற்றி வந்தனர். காலையில் இந்த நிகழ்வு முடிவுக்கு வந்ததும் மாலை முதியோர் கௌரவிப்பு நிகழ்வு அப்போது அதிபரிடம் நான் கேட்டேன் டீச்சர் மதியம் 2 மணிக்கு நிகழ்வு மண்டபத்தை தயார் செய்ய தாய்சங்க உறுப்பினர்களை வரச் சொல்லவா என்றேன். அதிபர் ஒரு குண்டை தூக்கி போட்டார் என் தலையில் அடுத்த தொடரில் பார்ப்போம்.....

 தொடரும்...... 

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஊர்வலத்தின் பின் நிகழ்வில் மாணவர்கள்.....

2010ம் ஆண்டு வாழ்வாதார உதவிகளை சமுர்த்தி பயனாளிக்கு மண்முனை வடக்கு தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்கள் வழங்குவதையும் அருகில் வங்கி முகாமையாளர் K.தங்கத்துரை மற்றும் வலய உதவியார் K.குமணன் மற்றும் S.சிறிதரன் ஆகியோர்.


Comments