சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில்......

 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில்......


மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி சமுதாய அடிப்படை  வங்கிச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டமானது  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தலைவி இரத்தினசிங்கம் வினோதினி  அவர்களின் தலைமையில் அன்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பி.ஜீவகுமார், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ்.தமிழ் வாணி  ஆகியோர் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் 2021ம் ஆண்டிற்கான புதிதாக நிறைவேற்று குழு அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 2021ம் ஆண்டில் செயற்படுத்தப்படவேண்டிய கருத்திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.








Comments