ஏறாவூர் பற்றில் 5 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி அதிஸ்ட வீடுகள்......

 

ஏறாவூர் பற்றில் 5 சமுர்த்தி பயனாளிகளுக்கு சமுர்த்தி அதிஸ்ட வீடுகள்......



சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி குடும்பங்களுக்கான மாதாந்த அதிஸ்ட வீட்டு சீட்டிலுப்பில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 5 வீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் குலுக்கப்படும் இச்சீட்டிலுப்பில் மாசி, பங்குனி, சித்திரை வைகாசி, ஆனி மாதங்களுக்கான அதிஸ்ட வீடுகளே இவை எனவும் தெரிவித்ததுடன் இவர்களுக்கான கொடுப்பவுகளை வழங்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிஸ்ட வீடுகளை பெற்ற பயனாளிகள் விபரம்...

1. கே.கந்தசாமி – 710026 – மயிலம்பாவெளி

2. சந்திரராஜா சிவகுமார் - 423567 – ஆறுமுகத்தான் குடியிருப்பு - 2

3. ஆனந்தன் சிவஞானம் - 711660 – மயிலவட்டுவான்

4. கிருஸ்ணப்பிள்ளை ரஜனிகாந்தன் - 713420 – கொம்மாதுறை கிழக்கு

5. கணபதிப்பிள்ளை ராசேந்திரன் - 84804 – வந்தாறுமூலை


 

Comments