கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள சமுர்த்தி வங்கியில் கடன் .......

கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொள்ள சமுர்த்தி வங்கியில் கடன் .......

ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கி இவ்வருடம் தொடக்கம் கல்வி நடவடிக்கைகளுக்காக நுகர்வு கடன்களை வழங்கவுள்ளதாக ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுத்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தார்வாசன் தெரிவித்துள்ளார்.
  2020ம் ஆண்டு புதிய கல்வியாண்டை ஆரம்பிக்க இருக்கும் சமுர்த்தி பயனுகரிகளின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள், புத்தகப்பை, மற்றைய பொருட்கனை கொள்வணவு செய்வதற்காக இக்கடன் வழங்கப்படவுள்ளதாக கூறியதுடன் மூன்று நான்கு பிள்ளைகளை கல்வி நடவடிக்கையில் ஈடுபடுத்தும் பெற்றோர் பாரியதொரு தொகையை இவ்கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்ய செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் இந்த சுமையை குறைக்க சமுர்த்தி வங்கி முன் நிற்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
   ஆண்டிறுதி பணிகள் சமுர்த்தி வங்கியில் காணப்பட்டாலும் இக்கடன் வசதி தேவைப்படும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டு தற்போது நாடு பூராவும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளதால் தொழில் துறைகள் மந்த கதியில் இருப்பதால் மக்களுக்கு இது ஒரு பாரிய உதவியாக இருக்கும் எனவும் குறிப்பிட்ட தோடு இக்கடன் தேவைப்படுவோர் அவ்வவ் கிராம சமுர்த்தி உத்தியோகத்தரும் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments