தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு....

தொற்றா நோய் பற்றிய விழிப்புனர்வு செயற்பாடு....

ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனுகரிகளுக்கான தொற்றாநோய் பற்றி கலந்துரையாடலும் நோய்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்கான வேலைத்திட்டமும் 16.09.2019  அன்று ஏறாவூர்பற்று பிரதேச செயலக சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
   நாடுபூராவும் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் இவ்வேலைத்திட்டம் ஏறாவூர் பிரதேச செயல சமுர்த்தி பிரிவால் ஏற்பாடு செய்யப்ட்டு நடைபெற்றது இதில் 100 சமுர்த்தி பெறும் பயனாளிகள் 39 கிராமசேவகர் பிரிவில் இருந்து கலந்து கொண்டனர். ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.பிறைசூடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கலடி வைத்தியசாலை வைத்தியதிகாரி ரி.பரமானந்தராசா கலந்து கொண்டு பயனுகரிகளுடன் கலந்துரையாடினார். இதன் பின் வருகை தந்த அனைத்து பயனுகரிகளுக்கும் நீரழிவு நோய்க்கான இரத்த பரிசோதனை, நிறை, எடை, மற்றும் இரத்த அழுத்தம் என்பன பரிசோதிக்கபப்ட்டு அதற்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டது இச்செயற்பாட்டிற்கு தாதி உத்தியோகத்தர் தி.திலீபனும் கலந்து கொண்டார்.
  இச்செயற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரிவின் சமூக அபிவிருத்தி முகாமையாளர் கே.புவிதரன் கலந்து கொண்டார். இந்நிகழ்வை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.தவநீதன் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.

















Comments