மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களே.....

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களே.....

நாம் சுமார் 20 வருடங்களாக சமுர்த்தி திட்டத்தில் இணைந்து நாம் பணியாற்றி வருகின்றோhம் பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை நாம் செய்து வந்தாலும் பல வெற்றி பெற்றாலும் சில நம்மையறிமல் தோல்வியையும் கண்டுள்ளன. நாம் இது வரை செய்து வந்த எந்த வேலைத்திட்டத்திற்கும் ஆவணப்படுத்தல் காணப்படுவது குறைவாகவே காணப்படுகின்றது என்றே கூறலாம். இன்று நமது தலைமையகத்தில் இருந்து வெளிவரும் சமுர்த்தி சஞ்சிகையில் எமது மாவட்டம் பற்றிய எந்த செய்தியும் வருவது இல்லை இப்பத்திரிக்கையை எந்தெந்த உத்தியோகத்தர்கள் வாராந்தம் பார்க்கின்றார்கள் என்பது கூட நமக்கு தெரியாது உள்ளது. நம் திறமையை மாவட்ட மட்டத்திற்குள் அல்ல பிரதேச செயலகத்திற்குள் அல்ல கிராமத்துடனேயே முடக்கி விடுகின்றோம். இதை வெளிக்கொனர நான் உங்களுடன் இணைகின்றேன் நமது கிராம, பிரதேச செயலக மட்ட சமுர்த்தி செய்திகளை முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிச்சம் போட்டு காட்டுவோம்.
  இது தங்களுக்கான பாரிய பணி அல்ல மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்கள் உள்ளன 29 சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன இவ்வங்கிகள் மூலம் நாளொன்றுக்கு எத்தனை கடன்கள் வழங்குகின்றோம் என்ன என்ன கடன்களை வழங்குகின்றோம், கடன் மீளளிப்பு பற்றி பார்வையிடுகின்றோம், என்ன என்ன சேமிப்புக்களை செய்கின்றோம், எந்த குடும்பங்களை மேம்படுத்தியுள்ளோம் இது போன்ற அன்றாட செய்திகளை நாம் தினமும் வெளியிடுவோம் பிரதேச செயலக மட்டத்தில் வாழ்வாதார உதவிகள் திரியபியச வீட்டுத்திட்டங்கள்  சிப்தொர புலமைபரில் திட்டங்கள்  சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இன்னும் நடைபெறும் பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை கொண்ட செய்திகளையும் சேகரித்து நாம் செய்யும் வேலைத்திட்டங்களை ஆவணப்படுத்தி எனது மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் அனுப்பும் பட்சத்தில் நான் அதை என் இணையதளம் மூலம் உலகம் பூராகவும் உள்ள மக்கள் பார்க்கும் வண்ணம் செய்ய முடியும்.
  சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே எனது சொந்த பணத்தில்  நான் ஒரு இணையதளத்தை சமுர்த்திக்காக உருவாக்கி எழுதி வருகின்றேன் இவ்விணையதளம் மூலமும் தங்கள் தங்கள் கிராம பிரதேச மட்டத்தில் நடைபெறும் செய்திகளை எனக்கு அனுப்பும் படி நான் தங்களிடம் கோரி இருந்தும் இதுவரை யாரும் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தவில்லை இதில் சிலர் நினைக்கலாம் என்ன இவருக்கு சமுர்த்தி இவ்வளவு அக்கறை என்டு என்னை ஒரு மனிதனாக நிலை நிறுத்தியது இந்த சமுர்த்தி தான் இதனால் தான் எனது இணையதளம் மின்னஞ்சல் முகவரியில் கூட சமுர்த்தியை இணைத்து தான் நான் செயற்படுத்துகின்றேன் என்னை ஒரு இணையதள பரிமாற்றம் செய்யும் நபர் ஒருவர் என்னிடம் கூறினார் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியை மாற்றுங்கள் உங்களுக்கு நிரந்தர வருமானம் வரத்தக்கதாக செய்து தருவதாக கூறினார் ஆனால் நான் மாற்றவில்லை,  நம்மை பற்றி பலரும் புறம் கூறலாம் அதற்கு நாம் கவலைப்படாமல் இனிவரும் காலங்களில் சிறப்பாக செயற்பட முனைவோம் தயவு செய்து தங்கள் கிராமங்களில் நடைபெறும் செய்திகளை கீழ்காணும் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் நான் தங்களின் திறமையை வெளிக் கொனர்வேன் நானும் ஒரு சமுர்த்தி உத்தியோகத்தர் தான் என்பதை கூறிக் கொள்னின்றேன்


சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com
மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - 
Email - jeyasdo@gamil.com
நன்றி
பாலசிங்கம் ஜெயதாசன்
சமுர்த்தி உத்தியோகத்தர்
தன்னாமுனை-மயிலம்பாவெளி

Comments