சமுர்த்தி மரண கொடுப்பணவு இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.......

சமுர்த்தி மரண கொடுப்பணவு இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.......

வேப்பவெட்டுவான் கிராமத்தின் சமுர்த்தி பயனுகரியான பத்மநாதன் கணகரெத்தினம் தம்பதிகளின் புதல்வியான செல்வி.சுபத்திரா 09.07.2018 அன்று  இறைபதமடைந்தார். எனவே இவருக்கான சமுர்த்தி சமூக பாதுகாப்பு காப்புறுதி பணத்தை இவரது உடலம் வைக்கப்பட்டிருந்த அவரது  இல்லத்தில் வைத்து அவரது தாயாரான திருமதி கணகரெத்தினத்திடம் கிராம சமுர்த்தி அதிகாரி பா.ஜெயதாசன் 09.07.2018 அன்று மதியம் 12.30 மணிக்கு வழங்கி வைத்தார்.ஆறு வயதுடைய சுபத்திரா பிறந்து 3 மாதங்களில் நோய்வாய்பட்டு  சுயமாகவே செயற்பட முடியாத ஒருவராகவே வாழ்ந்து வந்துள்ளார். இவரை இவரது தாயே பராமரித்து வந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும் மிகவும் வறிய இக்குடும்பத்திற்கு இக் கொடுப்பனவு மிக தேவையுடையதாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.

  இதற்காகவே சமுர்த்தி திட்டத்தில் முத்திரை பெறும் சமுர்த்தி பயனுகரிகளுக்கு இவ்வாரான கொடுப்பணவுகள் வழங்கப்படுகின்றது  இருப்பினும் இறப்பு நிகழும் சந்தர்ப்பத்தில் அவ்விடத்தில் வழங்குவதே சிறப்பம்சமாகும். எனவே இன்று (09.07.2018) நடந்த இந்த சம்பவத்திற்கு கிராம சமுர்த்தி அதிகாரி எடுத்துக் கொண்ட முயற்சியாலும் இதற்கு அனுமதியளித்த தலைமையக முகாமையாளராலும் இதை விரைவாக செயற்படுத்திய பிரதேச செயலாளராலும் குறித்த பயனுகரிக்கு முற்பணமாக 10000 (பத்தாயிரம்) ரூபாய் மதியம் 12.30 மணிக்கு வழங்கப்பட்டது. இதுவே சமுர்த்தியின் தார்மீக கடமையும் வெற்றியுமாகும்

செய்திகள் - சமுர்த்தி ஜெயா
சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் பார்வையிட -www.jeyasdo.com



மட்டு மாவட்ட சமுர்த்தி செய்திகளை உடனுக்குடன் அறிவிக்க - Email - jeyasdo@gamil.com




Comments