2017 மார்கழி சமுர்த்தி வீட்டு லோட்டரி வந்தாறுமூலை மேற்கு கிராமத்திற்கு........

2017 மார்கழி சமுர்த்தி வீட்டு லோட்டரி வந்தாறுமூலை மேற்கு கிராமத்திற்கு........

சமுர்த்தி முத்திரை பெறும் பயனுகரிகளுக்கு மாதாமாதம் அவர்களின் முத்திரை பணத்தில் இருந்து வீடு அமைத்து கொள்வதற்காக 50 ரூபாவை அறவீடு செய்து மாதா மாதம் சீட்டிலுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டு வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமைத்துக்கொள்ள இரண்டு லட்சம் வழங்கப்படுகின்றது. இப்பணத்தில்  வீடு இல்லாதவர்கள் வீடு அமைத்துக் கொள்ளலாம் காணி இல்லாதவர்கள் காணி கொள்வணவில் ஈடுபடலாம் குறையாக இருக்கும் வீடுகளை திருத்திக் கொள்வதற்கும் வழங்கப்படுகின்றது இதன் கொடுப்பணவுகள் ஆரம்ப கட்டமாக 80000 ரூபாவும் இரண்டாம் கட்டமாக 80000 ரூபாவும் மூன்றாம் கட்டமாக 30000 மூபாவும் இறுதி கட்டமாக 10000 ரூபாவும் வழங்கப்படுகின்றது.
  இதன் அடிப்படையில் 2017ம் ஆண்டின் மார்கழி மாத வீட்டு லொட்டரியில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக வந்தாறுமூலை மேற்கு கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் திருமதி கந்தவனம் கணகம்மாவிற்கு இந்த அதிஸ்டம் கிடைத்துள்ளது. ஓலை குடிசையில் வாழும் இவருக்கு சுமுர்த்தி திட்டத்தின் மூலம் ஒரு ஓடிட்ட வீடு ஒன்று கிடைக்கவுள்ளது இவருக்கான முதல் கட்டமாக 80000 ரூபாவிற்கான காசோலையை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜ் அவர்களால் வழங்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் தெரிவித்தார்.
செய்திகள் - சமுர்த்தி ஜெயா.
Email - jeyasdo@gamil.com

Comments