மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி ரயிலில் மோதி மோதுன்டு யானை படுகாயம்...............

 மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி ரயிலில் மோதி  மோதுன்டு யானை படுகாயம்...............

 (வரதன்) மட்டக்களப்பிலிருந்து (03) காலை காலை 06.10 கொழும்பு நோக்கி பயனித்த உதயதேவி கடுகதி ரயிலில் மோதி  மோதுன்டு யானை  பலத்த காயமடைந்துள்ளது.

 உதயதேவி கடுகதி  புகையிரதம் காலை 08.35.மணியளவில் மண்ணம்பிட்டி மற்றும் கல்லால புகையிரத நிலைத்திற்கிடைப்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டு மருத்துவக் குழு யானைக்கு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது, ரயிலில் யானை மோதுண்டதால் ரயில் பயணம் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாகிய பின்னரே மீண்டும் கொழும்புக்கான  பயணத்தை தொடர்ந்தது.

சுற்றுலாத்துறையை கவர்கின்ற இந்த யானைகள் மட்டக்களப்பு பிரதான புகையிரத பாதையில் மோதுகின்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதனால் இதற்கான ஒரு நிரந்தர தீர்வினை அரசாங்கம் விரைவாக காண வேண்டிய தேவை எழுந்துள்ளது என சுற்றாடல்  ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Comments