மண்டபத்தடி கமல சேவை நிலையத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு.......

 மண்டபத்தடி கமல சேவை நிலையத்தில் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு.......

(வரதன்) விவசாயிகள் தங்களது   நெற்செய்கை நடவடிக்கையின் போது இயற்கை அனர்த்தம் மற்றும் யானை தாக்கங்களில் இருந்து பாதுகாத்து தமக்கு  சிறந்த அறுவடையை தந்த இயற்கையின் கடவுளான சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு ஒன்று இன்று (15) வவுணதீவு பிரதேச செயலக பிரிவு உட்பட்ட மண்டபத்தடி கமநல சேவை நிலையத்தில் இடம் பெற்றது.

 மண்டபத்தடி கமநல பிரதேச  சேவை பிரிவு உட்பட்டு வரும் 27 கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு இந்த இன்று காலை பொங்கல் பொங்கி அதனை சூரிய பகவானுக்கு நன்றி கடன் செலுத்தி வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

 மண்டபத்தடி கமநல நிலையத்தின் பெரும்பாக  உத்தியோகஸ்தர் எம்.ஐ. பாய்ஸ் தலைமையில் இவ் நிகழ்வுகள் இடம் பெற்றது.  கமநல நிலையமானது அலங்கரிக்கப்பட்டு காலை சுப நேரத்தில் பொங்கல் பானைகளுக்கு அரிசி இடல் நிகழ்வு இடம் பெற்றதைத் தொடர்ந்து இறை வழிபாடுகளில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வின் போது மண்டபத்தடி கமநல  நிலையத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் விவசாயிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments