மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியாக கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது..............
மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியாக கிளீனிங் ஸ்ரீலங்கா வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது..............
(வரதன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது, இதன் ஒரு கட்டமாக இன்று (03) மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் புதிய அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக விளங்கும் லஞ்ச ஊழல் அற்ற சேவையினை மக்களுக்கு வழங்கும் முகமாக, மாநகர சபை லஞ்ச ஊழல் அற்ற பாதை எனும் திறப்பு விழா நிகழ்வு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதே வேளை மட்டக்களப்பு மாநகர சபையினால் முன்னெடுக்கும் மக்கள் பணிகளை சகலரும் வெளிப்படையாக அறியும் வகையில், மட்டக்களப்பு மாநகர சபையின் செய்தி இணையத்தளம் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கும் நிகழ்வு இடம் பெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.தனஞ்ஞயன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிரான் பிரதேச செயலாளர் எஸ்.சித்திரவேல் கலந்து கொண்டார்.
அத்தோடு நகரில் உள்ள மக்களின் சுகாதார நலனைக் கொண்டு மாநகர சபையில் முதல் தடவையாக நகரின் பிரதான இடங்களில் வீதிகளில் பொதுமக்கள் கழிவுகளை எறிவதை கண்டுபிடிக்கும் முகமாக திருமலை வீதி மற்றும் சத்துருக்காெண்டான் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் நிகழ்வும் இன்று இடம் பெற்றது.
Comments
Post a Comment