பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாட்டில் புலமைபரீட்சை சாதனையாளர்கள் கௌரவிப்பு..............
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் எருவில்பற்று ஆகிய இரண்டு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக பட்டிருப்பு கல்வி வலயம் இயங்கி வருகின்றது. இக் கல்வி வலயத்தில் 23338 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றார்கள், 1638 ஆசிரியர்கள் கல்வி புகட்ட வேண்டும் அதில் 278 ஆசிரியர்கள் பற்றாக்குறையாகவுள்ளது. விசேடமாக கணிதபாட ஆசிரியர்கள், விஞ்ஞானபாட ஆசிரியர்கள், ஆங்கிலமொழி கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள், உள்ளிட்ட பல ஆசிரியர்கள் வெற்றிடங்கள் காணப்பட்டு வருகின்றன என பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவாதனந்தம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயம் ஏற்பாடு செய்திருந்த தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (15) செட்டிபாளையம் மகா வித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில், பட்டிருப்பு கல்வி வலயத்தின் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
தற்போது நாங்கள் ஆரம்ப கல்வியிலேயே சாதனை படைத்த மாணவர்களைத்தான் கௌரவித்திருக்கின்றோம், ஆனாலும் எமது கல்வி வலயத்தில் ஆரம்பக் கல்வி கற்பிப்பதற்காக 212 ஆசிரியர்களின் தேவை, அவ்வாறு ஆரம்ப பிரிவு ஆசிரியர்களின் பற்றாக்குறை இருந்தும் எமது கல்வி வலயம் ஆரம்பக் கல்வி பிரிவிலே பல சாதனைகளை புரிந்துள்ளது. என அவர் இதன் போது தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் இதன் போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவித்தார்.
கல்வில் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவி வரும் அரசாங்க அதிபரை வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தனர்.
Comments
Post a Comment