வாழைச்சேனையில் ஸ்மார்ட் தேர்தல் அலுவலகம்:திறந்து வைத்தார் ஈரோஸ் செயலாளர் ராஜநாதன் பிரபாகரன்..............

 வாழைச்சேனையில் ஸ்மார்ட் தேர்தல் அலுவலகம்:திறந்து வைத்தார்  ஈரோஸ் செயலாளர் ராஜநாதன் பிரபாகரன்..............

'இன்றைய நாள் முக்கியமான நாள் எமது மக்கள்  இந்த நாட்டினுடைய தலைவிதியை தீர்மானிக்கின்ற நாளாகத்தான் இந்த அலுவலகம் திறந்திருக்கின்ற நாளை கருத வேண்டி இருக்கிறது' என்று  ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) செயலாளர்  ராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல் அலுவலகத்தை மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதான வீதியில் கறுவாக்கேணியில் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஈரோஸ் அமைப்பின் செயலாளர் இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்: 'ஈரோஸ் கட்சியான எங்களது இயக்கம் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். ஈரோஸ் அமைப்பு இன்று வடக்கு, கிழக்கு மலையகம் அகில இலங்கை ரீதியாகவும் உள்ள ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு முழு மனதுடன் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டு இருக்கிறோம். 

தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கான காரணம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எனக்கு நன்கு தெரியும், எனது மிக நீண்ட நாள் நண்பன் கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டது, அதே போன்று அரகல என்று ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டால் நாடு பின்நோக்கிப்போனது, குழந்தைகளுக்கு பால்மா இல்லை, சுகயீனமான ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு ஆட்டோவுக்கு பெற்றோல் இல்லை, எதை எடுத்தாலும் தட்டுப்பாடு இச்சந்தர்ப்பத்தில் கோத்தபாய நாட்டை யாராவது பாரம் எடுங்கள் என்று கூறிய  தருணம், யாரும் வரவில்லை அந்த சந்தர்ப்பத்தில் நாட்டை துணிந்து வந்து பாரம் எடுத்த ஒரே மனிதன் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்.

இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடில்லை, பால்மா இலகுவாக கிடைக்கின்றது, மருந்துக்கு தட்டுப்பாடில்லை, இலகுவான போக்குவரத்து. மூன்று இன மக்களும் சந்தோசமாக வாழுகின்றனர். அது மட்டுமல்ல இன்று சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் யார் என்றால் அது ரணில்விக்ரமசிங்க.  

இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு, நாட்டை பாதுகாக்க வல்லமையுடைய ஒரே ஒரு தலைவர் என்றால் இன்றைய ஜனாதிபதிதான் என்பதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்காது.

சஜித் பிரேமதாசா ஒரு நல்ல மனிதர் நாட்டை நேசிக்கக்கூடிய மனிதர் மக்களை நேசிக்ககூடிய மனிதர். அதே போன்று தான் அரநுரகுமார திஸாநாயக்கா. 

ஆனால் நாட்டை முன்னேற்றக்கூடிய மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய மேற்கத்தைய நாடுகளுடனான தொடர்பாடல் ரணில்விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் கிடையாது

இந் நிகழ்வில் வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத், வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் வட்டார அமைப்பாளர் பி.லட்சுமி மற்றும் பி.ரதேச அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments