கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பாற்குடப் பவனி..............

 கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய பாற்குடப் பவனி..............

    மட்டக்களப்பு, கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் நடை பெற்று வரும்  கும்பாபிஷேக நிகழ்வின் 48வது நாளில்  இடம் பெற்ற சங்காபிஷேகத்தை முன்னிட்டு  கல்லடி  உப்போடை நொச்சிமுனை சித்தி விநாயகர்  ஆலயத்தில் இருந்து, மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு பெண்கள்  (07) பாற்குடம் ஏந்திப் பவனியாகச் சென்றனர்.

 இப் பாற்குடப் பவனியில்  ஆயிரக்கணக்கான   பெண்கள் மஞ்சள் நிற பட்டாடை அணிந்து கலந்து கொண்டனர், இவர்களால் எடுத்துச் செல்லப்பட்ட பால் ஆலயத்தில்   விஷேட பூஜை நிகழ்த்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.










Comments