மட்டக்களப்பில் மாணவர்களுக்கு கற்பிக்கும்போது உயிரிழந்த ஆசிரியர்...........

 மட்டக்களப்பில்  மாணவர்களுக்கு கற்பிக்கும்போது உயிரிழந்த ஆசிரியர்...........

மட்டக்களப்பில் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொண்டிருக்கு போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் ஓர் ஆசிரியர்.

தம்பலவத்தையை பிறப்பிடமாகவும், களுவாஞ்சிகுடியை வசிப்பிடமாகவும் கொண்ட பட்டிருப்பு கல்வி வலயத்தில் மட்/ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி ஆசிரியராக கடமையாற்றிய அருணாசலம் ஆனந்தராசா எனும் ஆசிரியரே மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென மயக்கமுற்றுள்ளார்.

இதனை கண்ட மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்த விரைவாக செயற்பட்ட ஆசிரியர்கள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போது  அவர் காலமானார். இவரின் இழப்பு இப் பகுதியில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments