செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்................

 செங்கலடியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்................

மட்டக்களப்பு, செங்கலடியில் இன்றைய தினம் (24) டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் சிரமதான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிறிஸ்தவ குடும்ப சபை போதகர் எஸ்.ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகளில், பொதுச் சுகாதார பரிசோதகர்களும் பங்கற்றனர்.

விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்ற சிறுவர்கள், எல்லை வீதியூடாக ஊர்வலமாகச் சென்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி காரியாலயத்தை அடைந்தனர்.

அங்கிருந்து மாணவர்கள் ஐந்து அணிகளாகப் பிரிந்து சென்று வைத்தியசாலை வீதி, பொதுச்சந்தை வீதி, பிரதேச செயலக வீதி, பிரதான வீதி மற்றும் எல்லை வீதி ஆகிய இடங்களில் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.

சுமார் நான்கு மணித்தியாலங்களாக இடம்பெற்ற சிரமதானப் பணியின் போது சேகரிக்கப்பட்ட, பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலித்தீன் குப்பைகள் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் உழவு இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டன.






Comments