கறுவாக்கேணியில் மாற்றுத் திறனாளிகளுக்கானஒன்றுகூடல் மண்டபத்திற்கு அடிக்கல்.................

 கறுவாக்கேணியில் மாற்றுத் திறனாளிகளுக்கானஒன்றுகூடல்  மண்டபத்திற்கு அடிக்கல்.................

மட்டக்களப்பு, கோறளைப்பற்று கறுவாக்கேணியில் வாழ்வின் உதயம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒன்று கூடல் கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று  (24) இடம்பெற்றது.

வாழ்வின் உதயம் அமைப்பின் தலைவர் எஸ்.சஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயாநந்தி திருச்செல்வம் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்த்தர் மற்றும் சமூகசேவை உத்தியோகஸ்த்தர் எஸ்.ஜெயசேகர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நீண்டகாலமாக மாற்றுத்திறனாளிகளின் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு அவர்களுக்கென்றதொரு நிரந்தர கட்டடம் இல்லாத நிலை காணப்பட்டது. இக் குறைபாடு நிவர்த்தி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாக மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.






Comments