அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த பேரூந்து விபத்து ..........

 அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த பேரூந்து விபத்து ..........

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிப்பயணித்த இலங்கை போக்குவரத்து சபை  பேருந்தை செலுத்திய சாரதி மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்த நிலையில் விபத்து நடைபெற்றுள்ளது.

23ஆம் திகதி இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட பேருந்தின் சாரதி உடல் நலக்குறைவு காரணமாக இங்கினியாகலையில் பேருந்தை நிறுத்தி விட்டு தனியார் வைத்தியசாலை வைத்தியரிடம் மருந்து எடுத்துக்கொண்டு கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.

சாரதியின் உடல் நிலை மோசமாக இருப்பதால், பேருந்தை செலுத்தி செல்ல வேண்டாம் என வைத்தியர் அறிவுறுத்திய நிலையில், வேறு சாரதிகள் இல்லாத காரணத்தினால் 10 மைல் தூரம் வரை பேருந்தினை செலுத்திச்சென்றுள்ளார். சாரதி திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகவும், பேருந்து வீதியை விட்டு விலகி நின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் சாரதி உடனடியாக இங்கினியாகலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 



Comments