ரணில் விக்ரமசிங்கவின், தேர்தல் அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது...............

 ரணில் விக்ரமசிங்கவின், தேர்தல் அலுவலகம்  கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது...............

(வரதன்) இந்த நாட்டில் இளைஞர்களை உசுற்பேற்றி இந்த நாட்டினை மோசமான நிலைக்கு கொண்டுசெல்வோருக்கு பின்னால் செல்லாமல் குறுகிய காலத்தில் இந்த நாட்டினை மீட்டெடுத்து சிறந்த கட்டமைப்புடன் கொண்டுசெல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பின்னால் அனைவரையும் ஒன்றிணையுமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்கோள் விடுத்தார்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முதலாவது தேர்தல் அலுவலகம் இன்று (12) மாலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரில் திருகோணமலை பிரதான வீதியில் இந்த அலுவலகம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், இந்த அலுவலகத்தின் இணைப்பாளருமான எஸ்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியானது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஏனைய ஆதரவு வழங்கும் கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டுசெல்லும் அலுவலகமாகவும் இது செயற்படவுள்ளதாக இங்கு அறிவிக்கப்பட்டது

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சுதர்சன், ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட மகளிர் இணைப்பாளளர் சசிகலா ஜெயதேவா உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து,கொண்டனர்.

Comments