கல்முனை திருஇருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா ...............

 கல்முனை திருஇருதயநாதர் ஆலய வருடாந்த திருவிழா ...............

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள கல்முனை திரு இருதயநாதர் ஆலய திருவிழா திருப்பலியானது (28) ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தையும் கல்முனை மறைக்கோட்ட குருமுதல்வருமான அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடானது அருட்தந்தை ஹர்சதன் ரிச்சர்ட் அடிகளார் தலைமையிலும் இடம் பெற்றதோடு திருவிழா திருப்பலியானது T.சகாயநாதன் அடிகளாரின் தலைமையில் பங்குத்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளாரும், அருட்தந்தை அம்புரோஸ் அவர்களும் இனைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்திருந்தார்கள்.
மேலும் அருட்சகோதரிகளும், அருட்சகோதரர்களும் மற்றும் பக்தர்ஙளும் கலந்துகொண்டதுடன் திருஇருதயநாதர் திருச்சுருப பவனி ஆலய சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டதுடன் திருஇருதயநாதர் புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் திரு இருதயநாதர் திருச்சுருப ஆசீரை பங்குத்தந்தை அருட்பணி லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார். மேலும் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவுபெற்றது.






Comments