ஆரையம்பதியில் விபத்து....

ஆரையம்பதியில் விபத்து....
(கடோ கபு) ஆரையம்பதி பிரதான வீதியால் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியால் விபத்து ஏற்பட்டு முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே காத்தான்குடியிலிருந்து ஆரையம்பதி நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டிருந்த சாரதிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் சாரதியின் கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும் விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த (60) வயதுடைய நபராவார். விபத்துக்குள்ளான நபர் சிகிச்சைகளுக்காக ஆரையம்பதி பிரதேச வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு அதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.





Comments