மட்டக்களப்பு புதுவெளிக் குளத்து வட்டைக் கண்டத்தில் சிறுபோக நெற்செய்கை அறுவடை விழா..........

 மட்டக்களப்பு புதுவெளிக் குளத்து வட்டைக் கண்டத்தில் சிறுபோக நெற்செய்கை அறுவடை விழா..........

உறுகாமம் நீர்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக நெற்செய்கைக்கான அறுவடைப் பெருவிழா (25) சித்தாண்டி புதுவெளி குளத்துவட்டை கண்டத்தில் இடம்பெற்றது.

புதுவெளி குளத்துவட்டைக் கமநல அமைப்பின் தலைவர் அ.ஆசீர்வாதம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அதிதிகளுக்கு மலர்மாலை அணிவித்து மங்கல வாத்திய இசை முழங்க வரவேற்கப்பட்டு தமிழர்களின் பாரம்பரியக் கலாசார முறையில் அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்கள் குறித்த விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அறுவடை எதுவித தடங்கலுமின்றி விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்ற பிரார்தனையுடன் விசேட பூசை ஆலயத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் சேவையைப் பாராட்டிப் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இம்முறை குளத்து வட்டைக் கண்டத்தில் வரலாற்றில் முதற்தடவையாக அறுவடை விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு நீர்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம், செங்கலடி உறுகாமம் நீர்ப்பாசனப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியிலாளர் எஸ்.விஷ்ணுரூபன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக செங்கலடி உறுகாமம் நீர்பாசனப் பிரிவு திட்ட முகாமையாளர் ஜனாப் அ.மு.ஜெர்பான் முஹம்மட்டும் கலந்து கொண்டனர்.


Comments