காத்தான்குடியில் பொது சுகாதார பரிசோதர்கள் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை.............

காத்தான்குடியில் பொது சுகாதார பரிசோதர்கள் உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கை.............

மட்டக்களப்பு, காத்தான்குடியில் பொது சுகாதார பரிசோதர்கள் உணவகங்களில் (29) திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பஸீர், பொதுச் சுகாதார பரிசோதகர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் காத்தான்குடி நகர சபை ஊழியர்கள் சிலரும் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மூன்று உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை கைப்பற்றியதுடன், அதன் உரிமையாளர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதனைகள் தெரிவித்தனர்.

Comments