வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையின் அறுவடை................

 வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழான சிறுபோக நெற்செய்கையின் அறுவடை................

மட்டக்களப்பு, வாகனேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக அறுவடை விழா இன்று (15) அடம்படிவெட்டுவான் கண்டத்தில் இடம்பெற்றது.

வாகனேரி திட்ட முகாமைத்துவக் குழுத் தலைவர் சி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்  ஜே.ஜே.முரளிதரன், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு நீர்பாசன பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம், செங்கலடி உறுகாமம் நீர்பசான பொறியிலாளர் எஸ்.விஷ்ணுரூபன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த விவசாயக் கண்டத்தில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று தமிழர் பாரம்பரிய கலாச்சார முறையில் அறுவடை நிகழ்வு நடைபெற்றது. வாகனேரி திட்டத்தின் கீழ் இம் முறை சிறுபோக வேளான்மை செய்கையில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments