களுவாஞ்சிகுடியில் வீதி சமிஞ்ஞை மின் விளக்கு அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு........

 களுவாஞ்சிகுடியில் வீதி சமிஞ்ஞை மின் விளக்கு அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு........

(R.நிரோசன்)  களுவாஞ்சிகுடியில் (13)ம் திகதி அன்று மக்கள் வங்கிக்கு முன்பதான பிரதான வீதியில் அமைந்துள்ள முச்சந்தியில், வீதி சமிஞ்ஞை விளக்குகள் அமைப்பதற்காக நிகழ்வு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில்,   போக்குவரத்து அமைச்சர்  பந்துல குணவர்த்தன அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் அவர்கள் உரையாற்றும் போது, தற்பொழுது எனக்கு வீதி அபிவிருத்தி செய்வதற்கு 50 லட்சம் ரூபாய் தான் அரசாங்கத்தினால் கிடைக்கப்பெற்றுள்ளது, ஆனால் வெறுமென  இராஜாங்க அமைச்சராக உள்ள சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு   ஆயிரம் மில்லியன்  ரூபாயை விட  அதிகமான பணம்    அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக கிடைக்கப் பெற்றதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்  என்று  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கிராமிய மத தலைவர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள்,  என்ன பலரும் கலந்து கொண்டனர்.



Comments