மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டம்................

 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டம்................

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் இரண்டாம் காலாண்டிற்கான கணக்காய்வு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் காயத்திரி ரமேஸ்சின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (04) திகதி இடம் பெற்றது.
இதன் போது மாவட்டத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கிடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படு வரும் விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் ஐய வினாக்களுக்கு சரியான பதில்கள் வழங்கப்படுமிடத்து இறுதி கணக்காய்வு அறிக்கையில் இடம் பெறாது என்றாரு. இவ் விடயம் தொடர்பில் விரிவாக கணக்காய்வு அத்தியட்சகரினால் விளக்கங்கள் தெளிவு படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந், சிரேஸ்ட உதவி கணக்காய்வாளர் நாயகம் வஜிர சந்தனகுருப்பு, மாவட்ட பிரதம கணக்காளர் எம்.எஸ்.பஸிர், பிரதேச செயலாளர்கள், கணக்காய்வு அத்தியட்சகர் ஏ.எம்.மாஹிர், கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் எம்.ஆர்.வி.ஆர்.மீபுர, உதவி பிரதேச செயலர்கள், கணக்காளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகதார்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Comments