மட்டக்களப்பு கல்லடியில் புனித இஞ்ஞாசியார் பேர் கொண்ட திருவிழா.................

 மட்டக்களப்பு கல்லடியில் புனித இஞ்ஞாசியார் பேர் கொண்ட திருவிழா.................

புனித இஞ்ஞாசியார் பேர் கொண்ட தினத்தை முன்னிட்டு  (31) புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்துக்கு முன்பாக அமைந்துள்ள புனிதர் இஞ்ஞாசியார் சுருவத்தடியில் புனிதருடைய பெயர் கொண்ட திருநாள் இடம்பெற்றது.

புனித இக்னேசியஸ் வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி-டச்பார் இஞ்ஞாசியார் ஆலய பங்குத் தந்தை லோரன்ஸ் அடிகளார், முன்னாள் பங்குத் தந்தை ஜோசப்மேரி அடிகளார், அருட்பணி பிறைன் செலர் அடிகளார் ஆகியோர் இணைந்து செப வழிபாட்டினை மேற்கொண்டனர்.

புனித இஞ்ஞாசியார் பெயர் கொண்ட இப்பாடசாலையை 1955ல் யேசுசபை துறவியான கிளாக்சன் அடிகளாரால் கட்டப்பட்டது என்பத குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கிராம வாசிகள் எனப் பலர் கலந்து கொண்டனர். 



Comments