மட்டக்களப்பு காரைக்காடு பிரதேசத்தில் அதிகளவான வெடிப் பொருள்கள் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.............

 மட்டக்களப்பு காரைக்காடு பிரதேசத்தில் அதிகளவான வெடிப் பொருள்கள் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.............


 (வரதன்) மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின் போது 20ஆயிரம்   T56ரக துப்பாக்கி ரவைகளும் 300 கன்னி வெடிகளும்,  38 வெடி மருந்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடைப்படையின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் வர்ண ஜயசுந்தர அவர்களின் கீழான அம்பாறை கட்டளைத்தளபதி உதவி கட்டளை அதிகாரி பீ.குணசிரி அவர்களின் தலைமையின் கீழானதுமான மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரி WAAP சம்பத் குமார அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலினடிப்படையில் குறித்த அகழ்வுப்பணி  இடம்பெற்றது.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் KG லக்மல் குமார, கல்லடி, களுவாஞ்சிகுடி, வவுணதீவு  அகிய பிரிவுகளின் விசேட அதிரடிப்படையினர் இணைந்து குறித்த அகழ்வுப்பணியினை இன்று மேற்கொண்டனர்.  இதன் போதே குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கமைய குறித்த அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன், வெடிப்பொருட்களை கரடியனாறு பொலிசார் பொறுப்போற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.







Comments