மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம்.............

 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால் கவனயீர்ப்பு போராட்டம்.............

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளால், இன்று காலை காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பாராமுகமாக இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டக்காரர்களால் 'பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்துமூடு', 'பட்டம் கிடைத்தும் பலனில்லை' போன்ற பதாகைகள் ஏந்தி பல்வேறான கோசங்களும் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளும், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவ ஸ்ரீகணேச லோகநாதன் குருக்கள் மற்றும் யேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப் மேரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள போராட்டமானது தமக்கான நியமனங்கள் கிடைக்கும் வரை முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

Comments